முன்கூட்டியே ஜன., 10ல் ‛பராசக்தி' ரிலீஸ் : விஜய் படத்துடன் நேரடியாக மோதும் சிவகார்த்திகேயன் | சத்ய சாய்பாபாவின் அற்புதங்களை சொல்லும் ‛அனந்தா' : ஜன.,20 முதல் ஓடிடியில் வெளியீடு | 'ரேஸ் நடிப்பு அல்ல.. ரியல்' : அஜித்தின் புதிய வீடியோ வைரல் | ஹிந்தியில் திரிஷ்யம் 3 ரிலீஸ் தேதியை அறிவித்த அஜய் தேவ்கன் | முதல் படம் வெளியாகும் முன்பே சிறை இயக்குனருக்கு கார் பரிசு | நடிகர் மாதவன் பெயர், புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த தடை | போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ விடுவிப்பு | துபாய் பயணத்தை ரத்து செய்துவிட்டு நடிகர் சீனிவாசனுக்கு அஞ்சலி செலுத்திய பார்த்திபன் | அவதார் அடுத்த பாகம் பற்றி இப்ப கேட்காதீங்க : ஜேம்ஸ் கேமரூன் | சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வீடியோ வெளியானது! |

மோகன்லால் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் 'விருஷபா'. மலையாளம் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிப் படமாக உருவாகியுள்ள விருஷபா வரும் டிசம்பர் 25ம் தேதி பான் இந்திய ரிலீசாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தை கன்னட இயக்குனர் கவுரி நந்தா இயக்கியுள்ளார். பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான ஏக்தா கபூர் இந்த படத்தை இன்னும் சில நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு நடிகர் மோகன்லால் பேசும்போது, “கன்னட டைரக்டர் ஒருவர் மலையாளம், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படத்தை இயக்குவதும் அதை வடநாட்டு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிப்பதும் என இதன் வித்தியாசமான கூட்டணியே இந்தப் படத்தின் சிறப்பம்சமாக என்னை கவர்ந்தது. அது மட்டுமல்ல இந்த படத்தின் கதையை கவுரி நந்தா என்னிடம் சொன்னபோது நிச்சயமாக இது வித்தியாசமான படமாக இருக்கப் போகிறது எனக்கு தெரிந்தது. இரண்டு வித காலகட்டங்களில் இந்த படம் நடக்கும் விதமாக உருவாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.