மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

மலையாள சினிமா சமீப வருடங்களில் தான் நூறு கோடி என்கிற வசூல் இலக்கை எல்லாம் தாண்டி 200 கோடி என்கிற புதிய வசூல் கிளப்பை உருவாக்கியது. சமீபத்தில் வெளியான 'லோகா சாப்டர் 1 ; சந்திரா' திரைப்படம் 270 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற விண்ணைத் தொடும் மலையாள சினிமா என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர்கள் விவாத கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி 200 கோடிக்கு மேல் வசூலித்த 'தொடரும்' படத்தை தயாரித்த தயாரிப்பாளர் எம் ரஞ்சித்தும் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “மலையாள சினிமாவின் வியாபார எல்லை விரிவடைந்து கொண்டே இருக்கிறது. தற்போது தயாரிப்பில் இருக்கும் 'திரிஷ்யம் 3' படத்திற்கு முன் வியாபாரம் மட்டுமே 350 கோடி ரூபாய் நடைபெற்றுள்ளது'' என்கிற ஒரு தகவலையும் தெரியப்படுத்தினார்.
ஏற்கனவே மோகன்லால் படத்தில் அவர் மிகுந்த லாபம் சம்பாதித்தவர் என்பதாலும், அந்த வியாபாரங்களை அறிந்தவர் என்பதாலும் திரிஷ்யம் 3 படத்திற்கு ஏற்கனவே ரசிகர்களிடம் இருக்கும் எதிர்பார்ப்பு காரணமாகவும் நிச்சயமாக லோகா படத்தின் தியேட்டர் வசூல் சாதனையையும் திரிஷ்யம் 3 முறியடிக்கும் என எதிர்பார்க்கலாம்.




