கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த நடிகர் தர்ஷன். இவர் தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி டார்ச்சர் கொடுத்தார் என்கிற கோபத்தில் அவரை கொலை செய்ததாக 2023ல் குற்றம் சாட்டப்பட்டு தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அவருடன் நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 16 பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடிகர் தர்ஷன் தனது உடல் நலம் ரொம்பவே பாதிக்கப்படுவதாகவும் தனிமையில் இருப்பதால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்யும் எண்ணம் தோன்றுவதாகவும் கூறி தனக்கு ஜாமின் வேண்டி விண்ணப்பித்தார். ஆனால் நீதிமன்றம் ஜாமின் தர மறுத்தது.
இந்த நிலையில் தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வரும் நவம்பர் மூன்றாம் தேதி இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க இருப்பதாகவும், இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் முறையில் இறுதிக்கட்ட விசாரணை நடத்த இருப்பதாகவும் உத்தரவிட்டுள்ளது. அந்த சமயத்தில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எந்த ஒருவரும் ஆப்சென்ட் ஆகக்கூடாது என்றும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது நீதிமன்றம். அந்த வகையில் இந்த வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது என்றே தெரிகிறது.