இளையராஜாவின் பெயரில் விருது வழங்கப்படும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | இளையராஜாவிற்கு பாராட்டு விழா : அரங்கம் அதிர இன்னிசை மழை ; முதல்வர், ரஜினி, கமல் பங்கேற்பு | நான் சரியான வாழ்க்கை துணையாக மாற முயற்சிக்கிறேன் : தமன்னா | கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது : ஜாய் கிரிசில்டா பதிவு | ‛‛நான் தான் சிஎம்'' : பார்த்திபன் வெளியிட்ட அறிவிப்பு | சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா | மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லரில் நடிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரின் அரசியல் படத்தில் கைகோர்த்த நிவின்பாலி | ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் |
மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக மோகன்லால் இருந்தார். ஆனால் கடந்தாண்டு ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மலையாள திரையுலகில் புயல் வீச செய்தது. நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் உறுப்பினர்கள் சிலர் மேலும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் சொல்லப்பட்டன. காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டன. சிலர் கைது செய்யப்பட்டார்கள். அதில் குறிப்பாக நடிகர் சித்திக் மிகப்பெரிய அளவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானார்.. இதனைத் தொடர்ந்து அவரை சங்கத்திலிருந்து நீக்குவதற்கு பதிலாக மொத்தமாக அனைத்து உறுப்பினர்களுடனும் ராஜினாமா செய்தார் மோகன்லால். தற்போது அரசு நியமித்துள்ள தற்காலிக குழு ஒன்று நடிகர் சங்க பொறுப்புகளை கவனித்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தலாமா என முடிவு செய்யும் பேச்சுவார்த்தை வரும் ஜூன் 22ம் தேதி நடைபெற இருக்கிறது.
அதேசமயம் மோகன்லால் மீண்டும் தலைவர் பதவிக்கு வர தயாராக இருப்பதாகவும் ஆனால் தேர்தல் நடத்த வேண்டும் என, நடைபெற உள்ள அந்த பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டால் தான் போட்டியிடப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம். அதேசமயம் அவரையே தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ள சொன்னாலும், இதற்கு முன்பு சங்கத்தில் யார் யார் உறுப்பினர்களாக இருந்தார்களோ அவர்கள் அப்படியே மீண்டும் தொடர வேண்டும் என்பதையும் மோகன்லால் ஒரு முக்கிய நிபந்தனையாக விதித்துள்ளாராம். வரும் ஜூன் 22ம் தேதி தான் இது குறித்த முழு விவரம் தெரியவரும்.