இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து | பிளாஷ்பேக்: இளையராஜா கங்கை அமரன் இணைந்த படம் | பிளாஷ்பேக் : பாலிவுட்டை கலக்கிய வாசன் | 25வது நாளில் 'மார்கன்', சில நாட்களில் ஓடிடியில்… | பேதங்களை மறந்து திறமைக்கு வாய்ப்பளிக்கும் தமிழ் சினிமா: ஷில்பா மஞ்சுநாத் | பிளாஷ்பேக்: படச் சுருளை எரித்துவிடச் சொன்ன தணிக்கை அதிகாரி | பிளாஷ்பேக் : 2 தமிழ் படங்களில் மட்டும் நடித்த கன்னட முன்னணி நடிகை |
மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக மோகன்லால் இருந்தார். ஆனால் கடந்தாண்டு ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மலையாள திரையுலகில் புயல் வீச செய்தது. நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் உறுப்பினர்கள் சிலர் மேலும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் சொல்லப்பட்டன. காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டன. சிலர் கைது செய்யப்பட்டார்கள். அதில் குறிப்பாக நடிகர் சித்திக் மிகப்பெரிய அளவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானார்.. இதனைத் தொடர்ந்து அவரை சங்கத்திலிருந்து நீக்குவதற்கு பதிலாக மொத்தமாக அனைத்து உறுப்பினர்களுடனும் ராஜினாமா செய்தார் மோகன்லால். தற்போது அரசு நியமித்துள்ள தற்காலிக குழு ஒன்று நடிகர் சங்க பொறுப்புகளை கவனித்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்தலாமா என முடிவு செய்யும் பேச்சுவார்த்தை வரும் ஜூன் 22ம் தேதி நடைபெற இருக்கிறது.
அதேசமயம் மோகன்லால் மீண்டும் தலைவர் பதவிக்கு வர தயாராக இருப்பதாகவும் ஆனால் தேர்தல் நடத்த வேண்டும் என, நடைபெற உள்ள அந்த பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டால் தான் போட்டியிடப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம். அதேசமயம் அவரையே தலைவராக பொறுப்பேற்றுக் கொள்ள சொன்னாலும், இதற்கு முன்பு சங்கத்தில் யார் யார் உறுப்பினர்களாக இருந்தார்களோ அவர்கள் அப்படியே மீண்டும் தொடர வேண்டும் என்பதையும் மோகன்லால் ஒரு முக்கிய நிபந்தனையாக விதித்துள்ளாராம். வரும் ஜூன் 22ம் தேதி தான் இது குறித்த முழு விவரம் தெரியவரும்.