ஆக., 22ல் ரீ-ரிலீஸாகும் 'கேப்டன் பிரபாகரன்' | மம்முட்டி, பவன் கல்யாண் வரலாற்று படங்களின் இரண்டு இயக்குனர்களுக்கும் ஒரே போல நடந்த சோகம் | செல்போனை பறித்தாரா அக்ஷய் குமார் ? உண்மையை வெளியிட்ட லண்டன் ரசிகர் | 'டகோய்ட்' படப்பிடிப்பில் ஆத்வி சேஷ்-மிருணாள் தாக்கூர் காயம் | ஜிம்முக்கு போகாமலேயே 26 கிலோ எடை குறைத்த போனி கபூர் | ரஜினியின் 'கூலி': அமெரிக்காவில் ஐந்தே நிமிடத்தில் 15 லட்சம் ரூபாய்க்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன! | மாரீசன் பற்றி மனம் திறந்த பஹத் பாசில் | திருமணம் எப்போது? நித்யா மேனன் சொன்ன பதில் | செப்டம்பரில் தொடங்கும் 'பிக்பாஸ் சீசன்-9' | என்னால் 12 மணிநேரம் கூட பணிபுரிய முடியும்! - நடிகை வித்யா பாலன் |
மலையாள திரையுலகில் சர்ச்சைக்குரிய அதேசமயம் சர்வதேச விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை பெறும் படங்களாக தொடர்ந்து எடுத்து வருபவர் இயக்குனர் சனல்குமார் சசிதரன். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ‛காயட்டம்' என்கிற படத்தை இயக்கினார். மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவரும் சமீப காலமாக தமிழில் தனுஷ், அஜித், ரஜினி உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்து வருபவருமான நடிகை, நடித்ததுடன் அவரே அந்த படத்தை தயாரித்தும் இருந்தார். ஆனால் படம் முடிவதற்குள் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இயக்குனரிடமிருந்து ஒதுங்கிய நடிகை படத்தை வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டவில்லை.
ஆனால் சம்பந்தப்பட்ட நடிகைக்கு சிலரால் ஆபத்து என்றும் அவரை தன்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்றை பேசி வெளியிட்டார் இயக்குனர் சனல்குமார். ஆனால் தேவையில்லாமல் தன் மீது அவதூறு பரப்புவதாக கூறி காவல்துறையில் நடிகை அளித்த புகாரில் சனல் குமார் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளி வந்தார். இது 2022-ல் நடந்தது. தற்போது கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் இயக்குனர் சனல்குமார் சசிதரன் சம்பந்தப்பட்ட நடிகை மீது கடந்த முறை கூறியது போன்று சில விஷயங்களை கூறியதுடன் காயட்டம் படத்தை தான் யூடியூப்பில் இலவசமாக வெளியிடுவேன் என்றும் இங்கே தனக்கு மிரட்டல்கள் இருப்பதால் அமெரிக்கா செல்ல இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.
இப்போதும் சம்பந்தப்பட்ட நடிகை தன்மீது அவதூறு செய்தி பரப்புவதாக அவர் மீது காவல்துறையில் புகார் அளித்தார். அதே சமயம் இயக்குனர் சனல்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சொன்னபடி அமெரிக்காவிற்கு கிளம்பி சென்று விட்டார். இந்த நிலையில் கேரளாவில் ஆலுவா மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பாக சமீபத்தில் நடிக்கையிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அமெரிக்காவில் இருக்கும் இயக்குநர் சனல்குமாரை இந்தியாவிற்கு வரவழைப்பதற்காக லுக் அவுட் நோட்டீஸ் நீதிமன்றத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அவரை இந்தியாவிற்கு வரவழைப்பதற்கான முயற்சியில் காவல்துறையினர் இறங்கி உள்ளனர்.