யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
நயன்தாரா, மீரா ஜாஸ்மின் உள்ளிட்ட பல நடிகைகளை அறிமுகப்படுத்தியவர் பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு. இவரது படங்கள் உணர்வுப்பூர்வமாக இருக்கும். அதிலும் குறிப்பாக மோகன்லாலாலும் இவரும் இணைந்து உருவான ‛நாடோடி காட்டு, பட்டினப்பிரவேசம், ரசதந்திரம், சிநேக வீடு' மற்றும் இவர்கள் கூட்டணியில் கடைசியாக வெளியான ‛என்னும் எப்பொழும்' ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்தமானவை. அந்த வகையில் கிட்டத்தட்ட 10 வருடம் கழித்து மீண்டும் சத்யன் அந்திக்காடு, மோகன்லால் இருவரும் ‛ஹிருதயபூர்வம்' என்கிற புதிய படத்திற்காக இணைந்துள்ளனர்.
இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். பூவே உனக்காக சங்கீதா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் கதையை சத்யன் அந்திக்காடுவின் மகன்களில் ஒருவரும் இயக்குனருமான அகில் சத்யன் எழுதியுள்ளார். இன்று (பிப்.,10) இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. வரும் ஆகஸ்ட் 28ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக இந்த படம் வெளியாக இருக்கிறது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.