நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
மலையாள திரையுலகில் பழம்பெரும் நடிகையான நெய்யாற்றின்கரை கோமளம் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். இவருக்கு வயது 96. கடந்த 1951ல் டார்ஜான் படத்தை தழுவி மலையாளத்தில் காட்டை மையப்படுத்தி வெளியான முதல் படமான வனமாலா என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் கோமளம். அதன் பிறகு 1952 ல் நடிகர் பிரேம் நசீர் கதாநாயகனாக அறிமுகமான மருமகள் படத்தில் அவருக்கு ஜோடியாகவும் நடித்தார் கோமளம்.
1955ல் வெளியான நியூஸ் பேப்பர் பாய் என்கிற படத்தில் அவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது. ஆனாலும் 1955 வரை நான்கு வருடங்கள் மட்டுமே தனது நடிப்பை தொடர்ந்த கோமளம் குடும்பப் பிரச்சினை மற்றும் அப்போது சமூகத்தில் எழுந்த சில எதிர்ப்புகள் காரணமாக நடிப்பை விட்டு ஒதுங்கி திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.