மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
மலையாள திரையுலகில் கடந்த சில நாட்களாகவே சில நடிகைகள் பல வருடங்களுக்கு முன்பு தாங்கள் வாய்ப்பு தேடி நடிக்கப் போன மற்றும் நடித்த படங்களின் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் ஆகியோரால் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு ஆளானதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கையை தொடர்ந்து இப்படி பலரும் துணிச்சலாக பேசத் தொடங்கியுள்ளனர். அதே சமயம் எப்போதுமே புகார் தெரிவிப்பவர்களின் கருத்துக்களை மட்டுமே வைத்து முடிவு செய்யாமல் எதிர் தரப்பினரின் பக்கம் உள்ள நியாயங்களையும் கேட்க வேண்டும் என நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ் கூறியுள்ளார். இது போன்ற விஷயங்களில் ஆண்களும் கூட பாதிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, ‛‛நான் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டங்களில் நான் நடித்த ஒரு படத்தின் ஒருங்கிணைப்பு நபர் ஒருவர் இதுபோன்று காஸ்டிங் கவுச் விஷயத்தை ஊக்கப்படுத்தி செயல்பட்டு வந்தார். இது குறித்து படப்பிடிப்பு தளத்திலேயே அவரை தட்டிக்கேட்டு 'கவனிக்க' வேண்டிய விதத்தில் கவனிக்கவும் செய்தேன். ஆனால் அதன்பிறகு என்னை அந்த படத்தில் இருந்து நீக்கி விட்டார்கள்” என்று கூறியுள்ளார்.
அட்ஜஸ்ட் செய்துகொள்ள மறுக்கும் நடிகைகளை மட்டும் படத்தை விட்டு நீக்காமல் இப்படி தட்டிக் கேட்பவர்களையும் அதிலும் பிரபலமான முன்னணி நடிகரும் அரசியல்வாதியுமான சுரேஷ்கோபியின் மகனையே ஒரு படத்தில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் என்பது சற்று அதிர்ச்சியான தகவல் தான்.