மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தெலுங்கு சினிமாவின் முன்னணி குணசித்ர நடிகை ஹேமா. தமிழில் ஈரமான ரோஜாவே, அழகிய தமிழ்மகன், சத்யம், சாகசம், தேவி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் பெங்களூரில் உள்ள ஒரு ரெசார்ட்சில் போதை பார்ட்டி நடப்பதாக போலீசுக்கு வந்த தகவலை தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் போதை மருந்து உட்கொண்டதாக கைது செய்யப்பட்டனர். அவர்களில் சில தெலுங்கு, மற்றும் கன்னட சினிமாவின் துணை நடிகர், நடிகைகளும் இருந்தனர்.
இந்த போதை விருந்துக்கு ஏற்பாடு செய்தவர் தெலுங்கு நடிகை ஹேமா என்று கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து ஹேமா தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதோடு, அவர் படங்களில் நடிக்கவும் தடை விதிக்கப்பட்டது.
சில நாட்களுக்கு பிறகு ஜாமீனில் விடுதலையான ஹேமா நான் எந்த போதை விருந்தையும் ஏற்பாடு செய்யவில்லை. போதை பொருள் பயன்படுத்தும் பழக்கமும் தனக்கு இல்லை. தெலுங்கு நடிகர் சங்கம் சரியாக விசாரிக்காமல் அவசரக்கோலத்தில் தனக்கு தடை விதித்திருப்பதாக கூறினார். அதோடு இதுகுறித்து தெலுங்கு நடிகர் சங்கத்திற்கு கடிதம் எழுதினார். அத்துடன் போதை மருந்து அருந்தவில்லை என்ற மருத்துவ சான்றிதழையும் அனுப்பி வைத்தார். அவர் அனுப்பிய ஆதாரங்களை பரிசீலனை செய்த தெலுங்கு நடிகர் சங்க செயற்குழு ஹேமா மீது விதித்து இருந்த தடையை நீக்குவதாக அறிவித்தது.