பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் | பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு | தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு |

கன்னட திரையுலகின் பிரபல முன்னணி நடிகர் தர்ஷன். கடந்த மாதம் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவர் தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச செய்திகள் அனுப்பி டார்ச்சர் கொடுத்தார் என்பதற்காக அவரை கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை தர்ஷனுக்கு ஜாமீன் கிடைப்பதில் இழுபறி ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தர்ஷனிடம் இருந்து சில வருடங்களாகவே ஒதுங்கி இருந்த அவரது மனைவி விஜயலட்சுமி தற்போது தனது கணவரின் வழக்கில் தீவிரம் காட்டி வருகிறார்.
அவ்வப்போது சிறைக்கு சென்ற தர்ஷனை சந்தித்து வரும் விஜயலட்சுமி விரைவில் அவருக்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த வழக்கில் இருந்து விடுபட்டு விடுதலையாக வேண்டும் என்பதற்காகவும் சமீபத்தில் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கு சென்று ஒரு ஹோமம் நடத்தியுள்ளார். பின்னர் அங்கிருந்து கோவில் பிரசாதத்துடன் நேரடியாக சிறைக்கு சென்று தனது கணவர் தர்ஷனை சந்தித்துள்ளார். அந்த வகையில் தனது கணவர் இன்னொரு பெண்ணிடம் உள்ள நெருக்காதால் தன்னிடம் பாராமுகம் காட்டி தன்னை ஒதுக்கி வைத்த நிலையிலும் தர்ஷனின் மனைவி கணவனுக்காக சட்டப் போராட்டத்தில் இறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.