300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
நடிகர் நிவின்பாலி நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான வருஷங்களுக்கு சேஷம் படம், தொடர் தோல்விகளில் துவண்டிருந்த அவரை வெற்றி ஏணி மூலம் மேலே ஏறி வர உதவியிருக்கிறது. அந்த படத்தில் அவர் இடைவேளைக்கு பின் தான் வருகிறார் என்றாலும் படத்தின் நாயகர்களாக பிரணவ் மோகன்லால் மற்றும் தியான் சீனிவாசன் என இருவர் இருந்தாலும் கூட மொத்த படமும் இடைவேளைக்குப் பிறகு நிவின்பாலி கைவசம் சென்றுவிட்டது. அந்த வகையில் இந்த படத்தின் மூலம் கம் பேக் கொடுத்துள்ள நிவின்பாலிக்கு அவர் நடித்துள்ள மலையாளி பிரம் இந்தியா திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. ஜன கன மன என்கிற படத்தின் மூலம் பரபரப்பு ஏற்படுத்திய இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இந்த படத்தை இயக்கியுள்ளார்.
மலையாளத்தில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தமிழில் வரவேற்பையும் வசூலையும் பெற்று வரும் நிலையில் இந்த மலையாளி பிரம் இந்தியா படத்தை மலையாளத்தில் மட்டுமே வெளியிடுவதாகவும் வேறு எந்த மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப் போவதில்லை என்றும் படத்தின் இயக்குனர் டிஜே ஜோஸ் ஆண்டனி கூறியுள்ளார். தனது முந்தைய படமான ஜன கன மன படம் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஓடிடி தளத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்றாலும் கூட இந்த படம் ஒரு சராசரி மலையாளி கதையாக உருவாகி இருப்பதால் மலையாளத்தில் பார்த்து ரசிப்பது தான் சரியாக இருக்கும் என நாங்கள் முடிவு செய்ததால் மலையாள மொழியில் மட்டுமே இந்த படத்தை வெளியிடுகிறோம் என்று கூறியுள்ளார்.