இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாள திரையுலகில் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக பிசியாக நடித்து வருபவர் சுராஜ் வெஞ்சாரமூடு. இவர் நேற்று முன் தினம் தனது காரில் திருவனந்தபுரம் சென்று கொண்டிருந்த இப்போது எதிரே இளைஞர் ஒருவர் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது. இந்த விபத்தில் இளைஞருக்கு காலில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த இளைஞர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். காயம் எதுவும் இன்றி தப்பிய நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு மருத்துவமனைக்கு உடன் சென்று அடிபட்ட நபருக்கு சிகிச்சைக்கான ஏற்பாடுகளை கவனித்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக சுராஜ் வெஞ்சாரமூடு மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு உள்ளனர்.