பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பிசியான நடிகராக நடித்து வருபவர் கிச்சா சுதீப். தற்போது தாணு தயாரிப்பில் கன்னடத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் எம்என் குமார் என்பவர் சுதீப் மீது தன்னிடம் ஒப்பந்தம் செய்தபடி தனது நிறுவனத்திற்கு படம் நடித்து தராமல் ஏமாற்றி வருகிறார் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவர் ஏற்கனவே சுதீப்பை வைத்து கிட்டத்தட்ட நான்கு படங்கள் வரை தயாரித்தவர் தான். அதனால் இந்த குற்றச்சாட்டு பரபரப்பாக பேசப்பட்டது.
இது குறித்து இதுவரை அமைதி காத்த கிச்சா சுதீப், தற்போது இதற்கு பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறும்போது, “நான் ஏதாவது தவறுகள் செய்திருந்தால் இவ்வளவு நீண்ட காலமாக இந்த சினிமா துறையில் தொடர்ந்து நீடித்திருக்க முடியாது. இதற்கு மேல் இந்த பிரச்சனை பற்றி பேசினால் அது நீதிமன்றத்தை அவமதித்தது போல ஆகிவிடும். அதனால் எது உண்மை என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும் இன்னொரு தயாரிப்பாளரான ஹூக்கா ரகுமான் என்பவர் எழுப்பிய குற்றச்சாட்டு பற்றி கேட்டதற்கு, “ஒவ்வொருவரின் குற்றச்சாட்டுக்கும் நான் பதில் அளித்துக் கொண்டிருக்க முடியாது. அவர்களுக்கு தேவை என்றால் தனியாக நீதிமன்றத்தை நாடலாம்” என்று கூறியுள்ளார்.