படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தெலுங்கு திரையுலகின் இளம் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தெலுங்கு மட்டுமல்லாது தென்னிந்திய அளவிலும் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை பெற்றவர். அந்த வகையில் அவரது தம்பி ஆனந்த் தேவரகொண்டாவும் கடந்த 2019ல் தொரசாணி என்கிற படத்தில் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கிட்டத்தட்ட நான்கு படங்களில் நடித்தும் விட்டார். இந்த நிலையில் நேற்று ஆனந்த் தேவரகொண்டா நடித்துள்ள பேபி என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.
அதற்கு முன்னதாக இந்த படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட்ட போது நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தை பார்த்து ரசித்தனர். படம் முடிந்து வெளியே வந்ததும் தம்பி ஆனந்த் தேவரகொண்டா மற்றும் படத்தின் நாயகி வைஷ்ணவி இருவரையும் தோளோடு தோள் சேர்த்து இறுக்கி அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் விஜய் தேவரகொண்டா.
மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், படம் பார்த்துவிட்டு பல இடங்களில் தான் அழுததாகவும் கூறியுள்ளார். அதற்கு பிறகான சிரிப்பும் சந்தோஷமும் தான் இது என்று கூறியுள்ள விஜய் தேவரகொண்டா, தனது தம்பியும் படத்தின் நாயகி வைஷ்ணவியும் இந்த படத்திற்காக மிகப்பெரிய அளவில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள்.. மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள் என்றும் பாராட்டி உள்ளார்.