புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கேரளாவில் இதுவரை வெளிவந்த படங்களின் வசூலை வேகமாக முந்தி வருகிறது சமீபத்தில் வெளியான '2018' என்ற படம். த்ரிஷ்யம், லூசிபர் சாதனைகளை முறியடித்து 10 நாளில் 100 கோடி வசூலை தாண்டிவிட்டது. இந்த படம் 2018ம் ஆண்டு கேளராவில் ஏற்பட்ட பெருமழை வெள்ளப்பெருக்கின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வெள்ளப்பெருக்கின்போது நடந்த சம்பவங்களை அப்படியே படம் பிடித்திருப்பதால் கேரள மக்களோடு படம் மிகவும் நெருக்கமாகி இருப்பதும், படத்தின் சம்பவங்களை ஒவ்வொரு கேரள மக்களும் அனுபவத்திருப்பதால் படத்தோடு மக்களை தங்கணை இணைத்து கொள்வதால் படம் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
இந்த படம் பான் இந்தியா படமாக வெளியாகி இருக்க வேண்டியது. ஆனால் படம் கேரளாவில் நடந்த இயற்கை பேரழிவு சம்பந்தப்பட்டது. இது மற்ற மொழிகளுக்கு கனெக்ட் ஆகுமா என்ற சந்தேகத்தில் மலையாளத்தில் மட்டுமே வெளியானது. ஆனால் மழைவெள்ள பாதிப்பு என்பது வெவ்வேறு கால கட்டங்களில் எல்லா மொழி மக்களும் அனுபவித்தவைதான் என்பதாலும் படத்தின் வெற்றியாலும் படத்தை பிற மொழிகளிலும் வெளியிட முயற்சித்து வருகிறார்கள்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஜூட் ஆன்டனி ஜோசப் கூறியதாவது: இந்தப் படத்தை இயக்குவது மிகவும் கடிமான இருந்தது. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் எனது முழு நேரமும் சக்தியும் இந்தப் படத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. நான் ஒன்றும் சிறப்பான இயக்குநர் கிடையாது. அதே சமயம் இதற்கு முன்னால் பெரிய படங்களை இயக்கியது இல்லை. ஆனால், கடுமையான உழைப்பின் மூலம் எல்லோராலும் எதையும் சாதிக்க முடியும் என்பதை இப்படத்திலிருந்து நான் கற்றுக்கொண்டேன்.
தயாரிப்பாளரிடம் இந்தப் படத்தை தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் வெளியிட கோரினேன். இந்தப் படம் அந்த மக்களை எல்லாம் கனெக்ட் ஆகுமா, ஏனென்றால் மற்ற மொழிகளில் வெளியிட அதிக செலவாகும் என்றார். இது ஒரு இயற்கை பேரிடர் நிகழ்வு. அதனால் உலகிலுள்ள அனைவருக்கும் இப்படம் கனெக்ட் ஆகும் என்றேன்.
மும்பையில் படத்தை பார்த்தபோது உணர்ச்சிபொங்க அந்த பார்வையாளர்கள் கைதட்டிப் பார்த்தனர். மனித உணர்வுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை, மொழி வேறுபாடின்றி அவை எல்லோரையும் இணைக்க கூடியவை. கேரள வெள்ளத்தின்போது எனது வீடு முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது. கிட்டத்தட்ட அனைத்தையும் இழந்தேன். கடுமையான மன உளைச்சலில் இருந்தேன். அந்தச் சம்பவம்தான் படமெடுக்க தூண்டியது. படம் மற்ற மொழிகளிலும் வெளியானால் மகிழ்ச்சி அடைவேன். என்றார்.