கடவுள் பெயரில் டைட்டில்கள் : கண்டிப்பு காட்டும் தணிக்கை குழு | பிளாஷ்பேக்': சினிமாவில் ஜெயிக்க முடியாத லட்சிய நடிகரின் மகன் | பிளாஷ்பேக் : ஹேமமாலினிக்கு செட்ட ஆகாத தமிழ் சினிமா | செல்வராகவன் அக்காவாக மாறிய கவுசல்யா | திருவண்ணாமலையில் படமாக்கப்பட்ட 'கொலைச் சேவல்' | ஓடிடியில் டாப் 2ல் 'வித் லவ்' | 'துரந்தர் 2' பிரிமியர்: தமிழகத்தில் சிறப்பான முன்பதிவு | எம்ஜிஆர் பற்றி 'கிண்டலாக' பேசிய தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் | மார்ச் 18ல் 'அல்லு சினிமாஸ்' ஆரம்பம் | தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் |

மலையாள திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளில் மம்முட்டி நடித்த ஒரு சிபிஐ டைரி குறிப்பு படத்தின் ஐந்து பாகங்கள் இதுவரை வெளியாகி உள்ளன. இந்திய சினிமாவிலேயே இப்படி ஐந்து பாகங்கள் வெளியானது இந்த படத்திற்கு மட்டும் தான். இந்த ஐந்து பாகங்களின் கதையையும் எழுதியவர் சீனியர் கதாசிரியரான எஸ்.என் சுவாமி என்பவர் தான். இவரது வயது 72. தனது 40 வருட திரையுலக பயணத்தில் கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் கதை எழுதியுள்ள எஸ்.என் சுவாமி தற்போது முதல்முறையாக டைரக்ஷனில் அடியெடுத்து வைத்துள்ளார். மலையாள திரையுலகிலேயே இப்படி அதிக வயதில் இயக்குனராக அறிமுகமாகும் சாதனைக்கு சொந்தக்காரராகவும் மாறியுள்ளார் எஸ்.என் சுவாமி.
அதேசமயம் இவரது பெரும்பாலான படங்கள் ஆக்சன் மற்றும் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படங்களாகவே உருவாகியுள்ளன. ஆனால் இவர் முதன்முறையாக இயக்கவுள்ள படம் ஒரு ரொமாண்டிக் காதல் கதையாக உருவாக இருக்கிறதாம். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் தயன் சீனிவாசன் நடிக்கிறார். இவர் நடிகரும் இயக்குனருமான வினித் சீனிவாசனின் தம்பி என்பதுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நயன்தாரா நடிப்பில் வெளியான லவ் ஆக்சன் ட்ராமா படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.