போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
தமிழில் அஜித் நடித்த வேதாளம் படத்தில் வில்லன்களில் ஒருவராக அறிமுகமானவர் நடிகர் கபீர் துஹான் சிங். அந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியின் றெக்க மற்றும் விஷாலின் ஆக்சன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். அதேசமயம் அதிக அளவிலான தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி பிஸியாக நடித்து வருகிறார். சினிமாவில் நுழைந்த இந்த எட்டு ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்துவிட்ட கபீர் துஹான் சிங் தற்போது முதன்முறையாக மலையாளத்திலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
நடிகர் டொவினோ தாமஸ் மூன்று வேடங்களில் தற்போது நடித்து வரும் வரலாற்று படமான அஜயன்டே ரெண்டாம் மோஷனம் என்கிற படத்தில் வில்லனாக நடிக்கிறார் கபீர் துஹான் சிங்.. மூன்று விதமான காலகட்டங்களில் நடக்கும் இந்த படத்தில் இவரும் இரண்டு வித காலகட்டங்களில் இரண்டு கெட்டப்புகளில் நடித்துள்ளாராம்.
மேலும் இந்தப்படத்தில் டொவினோ தாஸுடன் வாள் சண்டை காட்சிகளிலும் முதன்முறையாக நடித்தது புதுமையான அனுபவமாக இருந்தது என கூறியுள்ளா கபீர் துஹான் சிங். மலையாள திரையுலகில் நுழைவதற்கான சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்தபோது தனது நடிப்புக்கு தீனி போடும் விதமாக இந்த படமும் கதாபாத்திரமும் அமைந்ததில் இரட்டிப்பு சந்தோஷம் என்றும் கூறியுள்ளார்.