Advertisement

சிறப்புச்செய்திகள்

கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மின்னல் முரளி ரீமேக் உரிமையை தர மறுக்கும் இயக்குனர்

23 நவ, 2022 - 11:06 IST
எழுத்தின் அளவு:
Director-not-giving-Minnal-Murali-remake

மலையாள திரையுலகில் கடந்த ஆண்டு டொவினோ தாமஸ், குரு சோமசுந்தரம் நடிப்பில் வெளியான படம் மின்னல் முரளி. இயக்குனர் பசில் ஜோசப் இயக்கியிருந்த இந்தப்படம் சூப்பர்மேன் கதையம்சத்துடன் உருவாகியிருந்தது. கிராமத்தில் இருக்கும் இரண்டு சாதாரண இளைஞர்களுக்கு எதிர்பாராதவிதமாக சூப்பர்மேன் பவர் கிடைப்பதாகவும், அதில் ஒருவன் நல்லவனாகவும் ஒருவன் எதிர்பாராத விதமாக வில்லனாகவும் மாறுவதாக வித்தியாசமான கோணத்தில் இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார் பசில் ஜோசப். இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக நடிகர் குரு சோமசுந்தரத்திற்கு மலையாள திரையுலகில் நிறைய வாய்ப்புகளை பெற்றுத் தந்துள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தை ரீமேக் செய்வதற்காக பாலிவுட்டிலிருந்து பல தயாரிப்பு நிறுவனங்கள் அணுகி உள்ளனர். ஆனால் படத்தின் இயக்குனர் பசில் ஜோசப், இந்தப்படத்தின் ரீமேக் உரிமையை எந்த மொழிக்கும் தர மறுத்துவிட்டார். காரணம் மலையாளத்திலேயே முதல் சூப்பர்மேன் படமாகவும், இந்தியாவிலேயே சூப்பர்மேன் கதையம்சத்துடன் உருவான முதல் மலையாளப்படமாகவும் இந்தப் படம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், மின்னல் முரளி என்றால் அது இந்தப்படத்தை மட்டுமே குறிக்க வேண்டும் என்றும் வேறு மொழிகளுக்கும் ரீமேக் உரிமையை கொடுப்பதன் மூலம் இதற்கான அடையாளத்தை இழக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார் பசில் ஜோசப்.

அதேசமயம் இந்த படத்திற்கு நிச்சயம் இரண்டாம் பாகம் உண்டு என்றும், ஆனால் இன்னும் மூன்று வருடங்கள் கழித்து தான் அது துவங்கப்படும் என்றும் கூறியுள்ளார். வினீத் சீனிவாசன் பாணியில் சமீபத்தில் வெளியான ஜெய ஜெய ஜெய ஹே என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றியை ருசித்துள்ள இயக்குனர் பசில் ஜோசப், தற்சமயம் நடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு மீண்டும் டைரக்ஷனில் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சீரியல் கில்லராக மாறிய துல்கர் சல்மான்சீரியல் கில்லராக மாறிய துல்கர் ... டிச-1ல் வெளியாகும் பிரித்விராஜ் - நயன்தாராவின் கோல்டு டிச-1ல் வெளியாகும் பிரித்விராஜ் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in