தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் |
மலையாள நடிகர் துல்கர் சல்மான் தீவிர நோயால் பாதிக்கப்பட்ட 100 குழந்தைகளை காப்பாற்றும் பணியை மேற்கொண்டுள்ளார். துல்கர் தனது அறக்கட்டளை மற்றும் தனது தயாரிப்பு நிறுவனமான வேபாரார் பிலிம்ஸ் ஆகியவற்றுடன் கைட்ஸ் அறக்கட்டளையோடு இணைந்து இந்த பணியை மேற்கொண்டுள்ளார்.
'Wayfarer's Tree of Life' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம், 100 ஏழை குழந்தைகளுக்கு உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. குழந்தைகளில் சிறுநீரகம், குடல் மற்றும் இருதய நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இந்த திட்டம் மூலம் உதவி செய்யப்பட இருக்கிறது. இந்த திட்டத்துக்கான லோகோவை துல்கர் சல்மான் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் இணைந்து வெளியிட்டுள்ளார். துல்கர் சல்மான் தனது அறக்கட்டளை மூலம் ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.