பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

கேரளாவில் ஆண்டுதோறும் சர்வதேச பெண்கள் திரைப்பட விழா நடக்கிறது. இதனை கேரள அரசின் கலாசித்ர அகாடமி நடத்துகிறது. பெண்களை மையப்படுத்தி வெளிவந்த படங்கள், பெண்கள் இயக்கிய படங்கள் இதில் திரையிடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கேரள சர்வதேசப் பெண்கள் திரைப்பட விழா கோழிக்கோட்டில் தொடங்கியது.
இந்தப் பட விழாவில் திரையிட, குஞ்சில்லா மாசிலாமணி என்பவர், தான் இயக்கிய 'அசங்காதிதார்' என்ற படத்தை அனுப்பி இருந்தார். இது ஓடிடி தளத்தில் வெளியான 'பிரீடம் பைட்' என்ற அந்தாலஜியில் இடம்பெற்ற ஒரு குறும்படம். பொதுவாக இந்த விழாவில் ஓடிடியில் வெளியான படங்கள் திரையிடப்படுவதில்லை. இதனை காரணம் காட்டி அசங்காததிதார் படத்தை நிராகரித்து விட்டனர்.
இந்த விதியை மாற்ற வேண்டும். எல்லா தளத்திலும் வெளியாகும் படங்களை வெளியிட வேண்டும் என்று கேரள பெண் இயக்குனர்கள் வற்புறுத்தி வந்தார்கள். இந்நிலையில் சர்வதே திரைப்பட தொடக்க விழாவில் இயக்குநர் குஞ்சில்லா மாசிலாமணி மேடை ஏறிச் சென்று அரசுக்கு எதிராகவும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராகவும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தார். இதை தொடர்ந்து போலீசார் விரைந்து வந்து அவரை அப்புறப்படுத்தினர். ஆனால் கைது செய்யவில்லை.
இது திரைப்பட விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை திரைப்படவிழாவில் இயக்குனர் லீனா மணிமேகலை திடீர் ஆர்ப்பாட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது.