கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
மலையாள திரையுலகை பொருத்தவரை நல்ல கதையம்சம் உள்ள படங்களை கொடுத்தாலும் கமர்சியல் வெற்றி படங்களை கொடுத்தாலும் அவர்களது வியாபார எல்லையும் வசூல் இலக்கும் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து வருகின்றன. குறிப்பாக மலையாள திரையுலகில் ஒரு ஹிட் படம் 50 கோடி வசூலை தொடுவது என்பதே மிகப்பெரிய சாதனைதான்.. அந்தவகையில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஜனகனமன என்கிற படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையில் தற்போது 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது.
ஒரு பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக என்கவுன்டர் செய்து கொல்லப்படுகின்றனர். ஆனால் வழக்கறிஞரான பிரித்விராஜ் இது அரசியல் காரணங்களுக்காக போலியாக நடத்தப்பட்ட என்கவுன்டர் என வாதிட்டு உண்மை என்ன என்பதை வெளிக்கொண்டு வருவார். ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படத்தை இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி என்பவர் இயக்கியிருந்தார்.