ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! |
சினிமாவில் நடிக்கும் ஆசை வந்துவிட்டால் அரசாங்க வேலையை கூட உதறிவிட்டு ஓடிவரும் ஆட்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதேசமயம் சினிமாவில் நடிக்கும் ஆசையில் சில படங்களில் நடித்து வந்த நடிகர் ஒருவர் தற்போது அரசு வேலை கிடைத்து இருப்பதால் சினிமாவை விட்டு விலகுவதாக கூறியுள்ளார். அரசாங்க வேலை என்றாலும் அவருக்கு கிடைத்துள்ளது துப்புரவு பணியாளர் பணி என்பது தான் இதில் ஹைலைட்டான விஷயமே..
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான ஆபரேஷன் ஜாவா என்கிற படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.. இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகர் உன்னி ராஜன். சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் ஆபரேஷன் ஜாவா உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் அவருக்கு துப்புரவு பணியாளருக்கான அரசாங்க வேலை கிடைத்துள்ளது.
இந்த வேலையின் தன்மை குறித்து தெரிந்தேதான் இதில் நான் சேர்ந்துள்ளேன்.. நேர்முகத் தேர்வில் கூட இதே பதிலைத்தான் அதிகாரிகளிடம் கூறினேன் என்று கூறியுள்ளார் உன்னி ராஜன்.. மாதந்தோறும் நிரந்தர வருமானம் வேண்டும் என்பதற்காகவே அவர் சினிமாவை விட்டு விலகி இந்த வேலையில் சேர்ந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.