சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

நடிகர் பிரித்விராஜ் கிட்டத்தட்ட நூறு படங்களில் நடித்து விட்ட நிலையில் லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். முதல் படத்திலேயே மோகன்லாலை வைத்து இயக்கி வெற்றிப்படமாக்கி மலையாள திரையுலகில் முதன் முறையாக 200 கோடி ரூபாய் வசூலித்த படம் என்கிற பெருமையையும் பெற்றுத் தந்தார். அதைத் தொடர்ந்து மீண்டும் மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்கிற நகைச்சுவை படத்தையும் எடுத்து ஹிட்டாக்கினார்.
தற்போது தான் நடித்து வரும் ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் முகாமிட்டுள்ளார் பிரித்விராஜ். இந்தநிலையில் சோசியல் மீடியா சாட்டிங்கில் ரசிகர்களுடன் பேசும்போது மோகன்லாலை வைத்து இரண்டு படங்கள் இயக்கி விட்டீர்கள்..? மம்முட்டியை வைத்து எப்போது படம் இயக்கப் போகிறீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த பிரித்விராஜ் நிச்சயமாக மம்முட்டியை வைத்து படம் இயக்க இருக்கிறேன் அதற்காக எனது நண்பரும் லூசிபர் பட கதாசிரியருமான நடிகர் முரளிகோபி மம்முட்டிக்கு என்றே ஸ்பெஷலான ஒரு கதையை உருவாக்கி வருகிறார். கதை தயாரானதும் மம்முட்டியின் முன்னால் சென்று கதை சொல்வதற்கு உட்கார இருக்கிறேன்.. ஆனால் முழுக்கதையும் தயாராவதற்கு கொஞ்ச காலம் பிடிக்கும்.. அதுவரை பொறுத்திருங்கள்” என்று கூறியுள்ளார் பிரித்விராஜ்.




