22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
தற்போது தான் நடித்து வரும் ஆடுஜீவிதம் படத்திற்காக சகாரா பாலைவனத்தில் ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருக்கிறார் நடிகர் பிரித்விராஜ், இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்பு கேரளா திரும்பியதும் தீர்ப்பு என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார். கடந்த வருடமே படத்திற்கான அறிவிப்பும் வெளியானது. இந்தப்படத்தில் கதாநாயகியாக இஷா தல்வார் நடிக்கிறார். ரணம் படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் மீண்டும் இந்தப்படத்தில் ஜோடி சேர்கின்றனர். திலீப்-சித்தார்த் இணைந்து நடித்த கம்மார சம்பவம் படத்தை இயக்கிய ரதீஷ் அம்பாட் இந்தப்படத்தை இயக்குகிறார்.
இந்தப்படத்தில் பரிசோதனை முயற்சியாக அலெகோரி என்கிற புதிய பாணியில் கதையை எழுதியுள்ளார் கதாசிரியரும் நடிகருமான முரளி கோபி. அதாவது, படத்தில் மேம்போக்காக ஒரு கதை சொல்லப்பட்டாலும் அதில் இன்னொரு கதையும் மறைமுகமாக சொல்லப்பட்டு கொண்டே வரும். இந்த இரண்டுக்குமே சம்பந்தம் இல்லாதது போல் தெரிந்தாலும் மறைமுகமாக சொல்லப்படும் கதையை மேம்போக்காக சொல்லப்படும் கதை, படம் முழுவதும் பிரதிபலிக்கும் என்கிறார் முரளி கோபி. ஹாலிவுட் படங்களில் இதுபோன்று ஜானரில் சில படங்கள் வெளியாகியுள்ளன மலையாளத்தில் இதுதான் முதல் முறை என்று கூறியுள்ளார்.
பிரித்விராஜ், முதன்முறையாக இயக்குனராக மாறி, மோகன்லாலை வைத்து இயக்கிய 'லூசிபர்' என்கிற சூப்பர் ஹிட் படத்தின் கதையை எழுதியவர் தான் இந்த முரளி கோபி. அதுமட்டுமல்ல கம்மார சம்பவம் படத்திற்கும் கதை எழுதியதும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.