சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

ரவி தேஜாவின் முதல் பான் இந்தியா படமாக உருவாகிறது டைகர் நாகேஷ்வரராவ். வம்சி இயக்கி வருகிறார். அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார். தற்போது இப்படத்தின் பணிகள் தொடங்கி உள்ளது. இந்த படத்தின் கதை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தை கலக்கிய பிரபல ரயில் கொள்ளைக்காரன் ஸ்டூவர்ட்புரம் டைகர் நாகேஷ்வரராவின் வாழ்க்கை தழுவியதாகும்.
இதற்கா 1970 களில் இருந்த ஸ்டூவர்ட்புரம் கிராமத்தை 7 கோடி ரூபாய் செலவில் மறு உருவாக்கம் (ஷெட்) செய்து வருகிறார்கள். மகாநடி, ஜெர்சி, எவரு, ஷியாம் சிங்க ராய் படங்களுக்கு கலை இயக்குனராக பணியாற்றிய அவினாஷ் கொல்லா தலைமையில் செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஷம்ஷாபாத் அருகே 5 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டு வருகிறது.




