நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் எதையாவது பேசி சிக்கலை இழுத்துக் கொள்பவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத்.. சில விஷயங்களில் கோபமாகும் எதிர் தரப்பினர் கண்கனாவுக்கு எதிராக நீதிமன்றத்தின் படியேறி விடுகின்றனர். அப்படித்தான் பாலிவுட் எழுத்தாளர் ஜாவேத் அக்தரை பற்றி மீடியா ஒன்றில் கங்கனா பேசப்போக, அதை தொடர்ந்து அவர் மீது மும்பை பெருநகர நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடர்ந்தார் ஜாவேத் அக்தர்.
ஆனால் கங்கனாவோ நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கங்கனாவின் வழக்கறிஞரிடம், அடுத்தமுறை கங்கனா நேரில் ஆஜாராக வேண்டும். இல்லாவிட்டால் நிச்சயமாக கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என கடுமை காட்டியுள்ளார் நீதிபதி.
தற்சமயம் பாஸ்போர்ட் புதுப்பிக்க விண்ணப்பித்திருக்கும் கங்கனா தன் மீதுள்ள வழக்குகள் காரணமாக பாஸ்போர்ட் புதுப்பித்தலை தடுக்க கூடாது என உத்தரவிடும்படி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். ஆனால் பாடகர் ஜாவேத் அக்தர் தன்மீது தொடர்ந்திருந்த இந்த அவதூறு வழக்கை தனது மனுவில் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்.
இதனால் கங்கனாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஜாவேத் அக்தர் கோரிக்கை வைக்க, அந்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால் அந்த சந்தோஷத்தை கங்கனா அனுபவிப்பதற்குள் இன்னொரு நீதிமன்றம் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கும் அளவுக்கு கடுமை காட்டியுள்ளது கங்கனா தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.