காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
2000ஆம் ஆண்டில் உலக அழகி பட்டம் பெற்றவர் பிரியங்கா சோப்ரா. அதையடுத்து விஜய் நடித்த தமிழன் என்ற படத்தில் அவர் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்த வகையில் பிரியங்கா சோப்ராவின் முதல் ஹீரோ விஜய் தான்.
அதன்பிறகு பாலிவுட், ஹாலிவுட் என்று பிரபலமாகி விட்ட பிரியங்கா சோப்ரா, தற்போது அன்பினிஷ்டு என்ற தலைப்பில் தனது வாழ்வில் நடந்த நல்ல, கெட்ட அனுபவங்கள் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் தனது முதல் ஹீரோவான விஜய்யைப் பற்றி கூறுகையில், விஜய்யின் பணிவும், ரசிகர்களுடன் அவர் வைத்துள்ள நெருக்கமும் அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையை ஏற்படுத்தியது. குறிப்பாக, அமெக்காவில் குவாண்டிகா தொடரில் நடித்து வந்தபோது ரசிகர்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டேன். அப்போது விஜய் தனது ரசிகர்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டதை நான் நினைவில் கொண்டேன் என்றும் தெரிவித்துள்ளார் பிரியங்கா சோப்ரா.