இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
மும்பை : வயது மூப்பு காரணமாக பழம்பெரும் ஹிந்தி நடிகரும், இயக்குநருமான மனோஜ் குமார் மும்பையில் இன்று(ஏப்., 4) காலமானார்.
ஹிந்தி சினிமாவின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் மனோஜ் குமார், 87. இவர் கடந்த 1937ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி பிறந்தார். இவர் பெரும்பாலும் நாட்டுப்பற்று மிக்க படங்களில் நடித்தும், இயக்கியும் பிரபலமானவர். இவரை பரத் குமார் என்றும் அழைத்து வருகின்றனர். புராப் அவுர் பஸ்ஜிம், கிரான்டி, ரொட்டி, காபாடா அவுர் மாகான், யாத்கார், பெஹ்சான், மேரா நாம் ஜோக்கர் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
1992ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2015ல் சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் மத்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது.
பா.ஜ.,வில் இணைந்து அரசியலில் ஈடுபாடு காட்டி வந்த மனோஜ் குமார், வயது மூப்பு காரணமாக, பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை சந்தித்து வந்தார். இந்த நிலையில், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.