இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
‛ராயல் ஸ்டாக் பூம்பாக்ஸ்' பெயரில் மும்பையில் இசை திருவிழா நடப்பது வழக்கம். மூன்றாம் ஆண்டு விழா அறிமுக நிகழ்வில் பாலிவுட் இசை துறையை சேர்ந்த அர்மான் மாலிக், அமித் திரிவேதி, நீத்தி மோகன், நிகிதா காந்தி, வேகம், இக்கா மற்றும் டி.ஜே.யோகி போன்ற பிரபலங்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர், பாடகர் அமித் திரிவேதி, “என்னைப் பொறுத்தவரை, கதைகளை ட்யூன்கள் மூலம் பகிர்ந்து கொள்வதற்கும் மக்களுடன் ஆழமாக இணைக்கவும் இது ஒரு வாய்ப்பாகும். இதில் நானும் ஒரு பகுதியாக பங்கேற்றது மகிழ்ச்சி'' என்றார்.
பாடகர் அர்மான் மாலிக் கூறுகையில், "இசை எப்போதுமே மக்களுடன் சேர ஒரு வழியாகும். அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், எந்த மொழி பேசுகிறார்கள் என்பது முக்கியமல்ல. ஒவ்வொரு நகரத்திலும் மக்களை சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. மக்களைச் சந்திக்கவும், வெவ்வேறு கலாச்சாரங்களை அனுபவிக்கவும் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. இசை எல்லோரையும் எப்படி ஒன்றிணைக்கிறது என்பதை உணர முடிகிறது'' என்றார்.
பாடகி நீத்தி மோகன் பேசுகையில், "உலகின் மொழியாக எப்போது இசை இருக்கிறது. இது மக்களை ஒன்றாக இணைக்கிறது. இந்த தளம் கலைஞர்களுக்கு ஒரு அருமையான இடமாகும். இங்கு ரசிகர்களுடன் இசை கலைஞர்கள் இன்னும் ஆழமாக இணைத்து கொள்ள முடியும். பல்வேறு இசை டியூன்களுடன் பயணித்தது மறக்க முடியாத தருணமாக உள்ளது'' என்றார்.