பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகன் ஜுனைத் கான் நாயகனாக அறிமுகமான 'மகாராஜ்' படம் கடந்த ஜனவரியில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நேரடியாக வெளியானது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த 1862ம் ஆண்டு நடைபெற்ற மகாராஜ் வழக்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இப்படத்தில் கிஷோரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஷாலினி பாண்டே.
மகாராஜ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜெய்தீப் அலாவத் இடம் பாத சேவைக்காக செல்லும் ஷாலினி பாண்டே மிகவும் நெருக்கமாக இருக்கும் காட்சி படத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த சர்ச்சையான காட்சியில் நடித்தது பற்றி இதுவரை கருத்து தெரிவிக்காத ஷாலினி பாண்டே, முதன்முறையாக மனம் திறந்துள்ளார்.
அவர் கூறியதாவது: என் கதாபாத்திரத்திற்கு உண்மையாக இருக்க முயற்சித்தேன். அதனாலேயே அந்த காட்சிப்பற்றி அதிகம் யோசிக்கவில்லை. முடிந்தளவு வேகமாகவே அந்த காட்சி எடுக்கப்பட்டது. காட்சியில் நடித்தபிறகே நெருடலாக இருப்பதை உணர்ந்தேன். சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு வந்து பார்த்தபோது, 'இப்போ என்ன நடந்துச்சு' என எண்ணினேன்; அதுதான் யதார்த்தம். படம் வெளியான பிறகே ரொம்ப நெருடலாக உணர்ந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.