போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

என்.சந்திரா இயக்கத்தில், லட்சுமிகாந்த் பியாரேலால் இசையமைப்பில் அனில் கபூர், மாதுரி தீட்சித், அனுபம் கெர், சங்கி பாண்டே, மந்தாகினி மற்றும் பலர் நடிப்பில் 1988ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி வெளிவந்த படம் 'தேசாப்'. 80களில் வெளிவந்த ஹிந்தி படங்களில் மிகப் பெரும் வெற்றி பெற்ற ஒரு படமாக அமைந்தது.
பக்கா மாஸ் கமர்ஷியல் படமாக வந்த படம் வட இந்தியாவைத் தவிர, தென்னிந்திய மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்றது. மாதுரி தீட்சித் கதாநாயகியாக நடித்திருந்தாலும் அவருடைய நடனத்தில் அமைந்த 'ஏக் தோ தீன்' பாடல்தான் இந்தப் படத்தை பெரும் அளவில் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கக் காரணமாக அமைந்தது.
படத்தின் 36வது ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து படத்தின் நாயகி மாதுரி தீட்சித், அப்படத்தின் புகைப்படங்கள் சிலவற்றைப் பகிர்ந்து, “இன்று 'தேசாப்' படத்தின் 36வது ஆண்டு தினம். இந்தப் படம் என் இதயத்தில் ஒரு சிறப்பைப் பிடித்த ஒன்று. உங்களது தொடர்ச்சியான பாராட்டுக்கள் எனக்கு நிறைய புரிய வைக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகும் 'ஏக் தோ தீன்' பாடலும் மோகினியின் கதையும் பார்வையாளர்களால் விரும்பப்படுவதைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் அசைக்க முடியாத அன்பிற்கும், ஆதரவிற்கும் நான் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கிளாசிக் சினிமாவை இன்னும் பல ஆண்டுகள் ஒன்றாக இணைந்து கொண்டாடுவோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.