'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
இந்திய சினிமாவின் அடையாளமாக சின்னமாக கருதப்படுகிறவர் அமிதாப் பச்சன். 80 வயதை எட்டி உள்ள இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களிலும் பிசியாக இருக்கிறார். ஆனாலும் ஹிந்தி தொலைக்காட்சிகள் அமிதாப்பை தொடர்ந்து கிண்டல் செய்து வருகிறது. இதுகுறித்து பலரும் இதுபோன்ற ஆளுமைகளை கேலி பொருளாக்காதீர்கள் என் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் கண் முன்பே அப்படி ஒரு அவலம் அரங்கேறியதால் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டு அபிஷேக் பச்சன் வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் முக்கிய விருந்தினராக பங்கேற்க அபிஷேக் பச்சன் சென்றிருந்தார். இந்த நிகழ்ச்சியை நடிகரும், நடிகை ஜெனிலியாவின் கணவருமான ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் குஷா கப்பிலா ஆகியோர் தொகுத்து வழங்கினர். அப்போது நிகழ்ச்சியில் ஒருவர் அமிதாப்பச்சனை பற்றி கேலியாக பேசி ஜோக் அடித்தார்.
இதனால் கோபமான அபிஷேக் பச்சன், ''நிறுத்துங்கள். என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் ஜோக் அடியுங்கள். என் தந்தையை கேலி செய்து பேசுவது நல்லது அல்ல'' என்று ஆவேசமாக கூறிவிட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். நிகழ்ச்சியை நடத்தியவர்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. இந்த சம்பவம் அமிதாப் மற்றும் அபிஷேக் ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.