பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
பிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், லண்டனில் தலைமறைவாக வாழும் மோசடி தொழில் அதிபர் லலித் மோடியுடன் லிவிங் டூ கெதராக வாழ்வதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்யலாம் என்று தகவல்கள் வெளியானது. இந்த தகவலை வெளியிட்டதே லலித் மோடிதான்.
இந்த தகவல் வெளியானதும் சமூக வலைத்தளத்தில் சுஷ்மிதான சென்னை கிழித்து தொங்க விட்டார்கள். பணத்துக்காக எதையும் செய்வீர்களா? என்பது பிரதான கேள்வியாக இருந்தது. இந்த நிலையில் சுஷ்மிதா சென் கோபமான பதிவொன்றை வெளியிட்டிருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் மகிழ்ச்சியான ஓர் இடத்தில் இருக்கிறேன். யாரையும் நான் திருமணம் செய்யவில்லை. திருமணத்தின் அடையாளமாக எனது விரல்களில் எந்த மோதிரமும் இல்லை. என்னைச் சுற்றி அளவற்ற அன்பு சூழ்ந்துள்ளது அவ்வளவே. தற்போது மீண்டும் எனது வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டேன். இதை தெளிவாகக் கூறிக்கொள்கிறேன். இவ்வாறு எழுதியிருக்கும் சுஷ்மிதா, இந்த பதிவோடு தன் குழந்தைகளோடு இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார்.