நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பாலிவுட்டில் இப்போதும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது ஷோலே படம் தான். இதன் வெற்றியையும், வசூலையும் அந்தக்காலத்தில் மிகப்பெரியது. அமிதாப் பச்சன், தர்மேந்திரா, அம்ஜத்கான், ஹேமமாலினி, ஜெயபாரதி, சஞ்சீவ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள், ரமேஷ் சிப்பி இயக்கி இருந்தார்.
இந்த படத்தை ரீமேக் செய்யவும், இதே தலைப்பில் படம் எடுக்கவும் முயற்சித்து வந்தனர். இந்த நிலையில் இந்த படத்தின் தலைப்பை மற்றவர்கள் பயன்படுத்த தடை விதிக்க கூறி தயாரிப்பு நிறுவனம் டில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில் ஷோலே என்பது ஒரு சிறிய படத்தின் பெயர் அல்ல. அது ஒரு அடையாளம். அதனால் அந்த தலைப்பு பாதுகாப்பற்றதாக இருக்க முடியாது. அதனை யாரும் தவறாக பயன்படுத்தக்கூடாது. தயாரிப்பாளரின் முறையான அனுமதி இன்றி படத்தின் காட்சிகளை வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடாது. ஷோலே.காம் என்ற பெயரில் இணைய தள பக்கங்களும் தடுக்கப்படுகிறது. இதனை மீறுகிறவர்கள் தயாரிப்பாளருக்கு 25 லட்சம் ரூபாய் நஷ்டஈடு கொடுக்க வேண்டும். என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.