சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

பிரபல நடிகை சோனம் கபூர் வீட்டில் கடந்த பிப்ரவரி 11ம் தேதி ரூ.2.4 கோடி மதிப்பிலான நகை மற்றும் பணம் கொள்ளை போயுள்ளது. சம்பவம் நடந்து 2 வாரங்களுக்கு பின்னர், கடந்த பிப்ரவரி 23ம் தேதி அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளார் சோனம் கபூர் .
இந்நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் சோனம் கபூரின் வீட்டில் நர்சாக பணிபுரியும் அபர்னா ருது வில்சன் ( வயது 31) என்ற பெண் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
சோனம் கபூரின் மாமியாரின் உடல்நிலையை கவனிப்பதற்காக நர்சஸ் அபர்னா பணியமர்த்தப்பட்டுள்ளார். அவர், சோனம் கபூரின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த பணம், நகையை கொள்ளையடித்துள்ளார். இந்த கொள்ளை சம்பவத்திற்கு நர்சின் கணவர் நரேஷ் குமார் சாஹர் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். இதனையடுத்து, நடிகை சோனம் கபூர் வீட்டில் கொள்ளையடித்த நர்ஸ், கணவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நர்சிடம் இருந்து கொள்ளையடித்த நகை, பணத்தை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.