அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் |

அரசியல் புரோக்கராகவும், மோசடி மன்னனாகவும் கருதப்படுகிறவர் பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர். அவர் மீது பல மோசடி வழக்குகள் உள்ளது. கைது செய்து சிறையில் அடைத்த பிறகும், ஜெயலில் இருந்து கொண்டே 200 கோடி மோசடி செய்தார். அவருக்கும் பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்டாண்டசுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு சமீபத்தில் வெளியானது அவரும் இந்த மோசடி வழக்கில் சிக்கி உள்ளார்.
இந்நிலையில் கடந்த 5ம் தேதி மும்பையில் இருந்து மஸ்கட் தப்பி செல்ல முயன்ற நடிகை ஜாக்குலினை, மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவர் மீது அமலாக்கப் பிரிவில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ள காரணத்தால் பயணம் மேற்கொள்ள அவருக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும், நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது அமலாக்கப் பிரிவு. அதன்படி, விசாரணைக்காக டில்லியில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ஜாக்குலின் நேற்று ஆஜரானார். சிறையில் இருந்து கொண்டே இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தொழிலதிபர்களிடம் 200 கோடி மோசடி செய்ததாக புகார் தொடர்பாகவும், இந்த மோசடியில் நடிகை ஜாக்குலினுக்கு உள்ள பங்கு என்ன என்பது குறித்தும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். இன்னும் சில நாட்களில் அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.