Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம்

19 அக், 2025 - 01:50 IST
எழுத்தின் அளவு:
Anuradha-Sriram-Exclusive-Interview


'நலம் நலமறிய ஆவல்... உன் நலம் நலமறிய ஆவல்...' இந்த குரலில்தான் என்னவொரு இனிமை!

'நிலவை கொண்டு வா... கட்டிலில் கட்டிவை, மேகம் கொண்டு வா... மெத்தை போட்டு வை...' இந்த பாடலை பாடும் போது, அந்த குரலில் அசாத்திய கம்பீரம் குடி கொண்டிருக்கும். இப்படி இரண்டு குரலுக்கும் சொந்தக்காரர்தான், பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம். சமீபத்தில் கோவை வந்திருந்த அவர், நமது நாளிதழுக்கு அளித்த பேட்டி:

இன்று பின்னணி பாடகர்களாக வரும் இளைஞர்கள், ஓரிரு படங்களிலேயே மாயமாகி விடுகின்றனர். பீல்டில் நிலைத்து நிற்க, அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

அவர்களுக்கு நாம் அறிவுரை வழங்க முடியாது. இன்று ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் வருகின்றன. அதில் இருந்து ஏராளமானோர் தேர்வாகின்றனர். ஆண்டுக்கு, 40 பேர் ஒரு நிகழ்ச்சியில் தேர்வாகின்றனர். அதில் வெற்றி பெறுபவர்கள் இருவரே. ஆனால் அத்தனை பேரும் திறமைசாலிகளே.

எத்தனை பேருக்கு திரைபடங்கள் வாய்ப்பளிக்க முடியும். அதனால் தான் அவர்களால் அடுத்தடுத்த திரைப்படங்களில், வெற்றி பெற முடியவில்லை. ஆனால், அவர்களுக்கு ஏராளமான தளங்கள் உள்ளன. அவற்றில் வெற்றி பெறலாம். சினிமா மட்டுமே தளம் அல்ல. அடுத்த தளங்களிலும் வெற்றி பெறலாம்.

கர்நாடக சங்கீதம் இன்றி, பிற இசைகள் இல்லை என்ற நிலைபாடு உள்ளது. கர்நாடக சங்கீதம், வெஸ்டர்ன்; இதில் யார் எதை தேர்ந்தெடுத்தால் வெற்றி பெற முடியும்?

ஒவ்வொரு இசைக்கும் ஒரு தனித்துவம் உண்டு. அந்தந்த இசைக்கு ஒரு தளம் உள்ளது. பல பாடல்கள் பாடிய பின்னரே, நாங்கள் எல்லாம் வெளியில் தெரிந்தோம். அந்த காலத்தில் டிஜிட்டல் மீடியாக்கள் இல்லை. இன்று டிஜிட்டல் உலகம் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

யார் வேண்டுமானாலும், என்ன தகவலை வேண்டுமானாலும் இசையாக பதிவு செய்யலாம். இன்று 'டிஜிட்டல் இன்ப்ளூயன்சர்ஸ்' இசைத் துறையில் அதிகம். உங்களுக்கு தனித்தன்மை ஒன்று இருந்து, தன்னம்பிக்கையுடன் இசையை உருவாக்கி அதை வெளியிடும் போது அது வெற்றி பெற்றால், உங்களை பின் தொடர லட்சக்கணக்கில் ஆட்கள் இருப்பர்.

இசைத்துறையில் சாதிக்க, இளம் தலைமுறையினர் செய்ய வேண்டியதென்ன?

இன்றைய இளம் தலைமுறையினருக்கு, நாம் ஏதுவும் சொல்ல முடியாது. அவர்களுக்கு ஏராளமான தடைகள் உள்ளன. அதை உடைத்து வெளியே வர வேண்டும். அவர்களுக்கு சிறந்ததை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. ஏராளமான விருப்பங்கள் இருந்தாலே, வாழ்க்கை சிக்கலாகத் தானே இருக்கும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான்நான் ‛அப்புக்குட்டி' ஆனது ... துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in